Latestமலேசியா

ஜெலுதோங் சந்தையில் MBPP அமலாக்க அதிகாரிகளுடன் கைகலப்பு ; இரு நண்டு வியாபாரிகள் கைது

ஜோர்ஜ் டவுன், மே 10 – பினாங்கு, ஜெலுதோங் காலை சந்தையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான விசாரணைக்காக, இரு நண்டு வியாபாரிகள் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் 23 மற்றும் 35 வயது ஆடவர்கள் என்பதை, திமோர் லாவுட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஷ்லாம் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவ்விருவருக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 353-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, ஜெலுதோங் பொதுச் சந்தையில், சோதனையில் ஈடுபட்டிருந்த மாநில நகராண்மைக் கழகத்தின் அமலாக்கா அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் கைகலப்பு மூலும் 39 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

அனுமதி இன்றி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு வியாபாரிகளை உடனடியாக காலி செய்ய சொன்ன அமலாக்க அதிகாரிகளை அவர்கள் தாக்கியதை தொடர்ந்து, தற்காப்பு கருதி அதிகாரிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலால் அங்கு கைகலப்பு மூண்டதாக கூறப்படுகிறது.

எனினும், அச்சம்பவத்தில் யாரும் மோசமான காயங்களுக்கு இலக்காகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!