![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-21-Mar-2024-09-26-AM-3056.jpg)
அலோஸ்டார் , மார்ச் 21 – Kuala Kedah-விலிருந்து 9 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடி படகில் ஏற்பட்ட துவாரத்தினால் அப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். அந்த மீனவர்களின் படகு நேற்று அதிகாலை மணி 3.40 அளவில் மூழ்கியது. லங்காவியிலுள்ள கடல் மீட்பு துணை நிலையத்திற்கு இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அந்த மீனவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக Kuala Kedah கடல் மண்டல இயக்குநர் Noor Azreyanti Ishak கூறினார். அந்த மீனவர்கள் அனைவரும் மற்றொரு மீனவர் படகினால் நேற்று காலை மணி 8,05 அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டனர். 34 மற்றும் 39 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் பின்னர் மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் படகின் மூலம் Kuala Kedah விலுள்ள Batang Pinang படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டனர்.