பெருவாஸ், மார்ச் 21 – Trong கிலிருந்து Beruas செல்லும் கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் வாகனத்தினால் மோதப்பட்டதாக நம்பப்படும் புலி ஒன்று மடிந்து கிடக்கக் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 3 அளவில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த புலியின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Perhilitan எனப்படும் வனவிலகு மற்றும் தேசிய பூங்காத்துறையின் பேரா இயக்குனர் Yussof Shariff தெரிவித்தார். அந்த புலி திங்கட்கிழயையன்று இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் கூறினார். அந்த புலியின் உடற்பகுதியை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை Perhilitan மேற்கொண்டது. சாலையின் இடையே உள்ள இருப்பில் படுத்திருந்த நிலையில் புலியின் உடல் பகுதி இருக்கும் 22 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
18 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
18 hours ago