Latestமலேசியா

தெலுக் இந்தானில், அழுகிய நிலையில் சிற்றோடையில் சிக்கிக் கொண்டிருந்த சடலம் மீட்பு

தெலுக் இந்தான், மார்ச் 6 – பேராக், தெலுக் இந்தான், ஜாலான் மஹாராஜா லேலாவிலுள்ள, நீர்நிலை ஒன்றிலிருந்து, அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் மணி 12.05 வாக்கில், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த சடலம் மீட்கப்பட்டதை, ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மாட் அட்னான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.

சிற்றோடையிலுள்ள, மரத்துக்கடியில், ஆடையின்றி அந்த சடலம் சிக்கிக் கொண்டிருந்தது, தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலத்தின் பல பாகங்களை உடுப்புகள் தின்று இருக்கலாம் என நம்பப்படுவதால், இறந்தவரின் நிலை முகவும் மோசமாக காணப்பட்டதோடு, முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.

அந்த சடலம் சவப்பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை ; சம்பந்தப்பட்ட நபர் “சிதைவு” காரணமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

அண்மைய சில நாட்களில், குடும்ப உறுப்பினர்களை காணவில்லை என்றால், உடனடியாக, 05-6233969 என்ற எண்களில் ஹிலிர் பேராக் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!