![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-07-Mar-2024-09-24-PM-1026.jpg)
கோலாலம்பூர், மார்ச் 7 – மக்களின் மனம் கவர்ந்த தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, முடிந்த மார்ச் 3 ஆம் தேதி, Horizon Connect நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசையமைப்பாளர் தேவாவின் 35 ஆம் ஆண்டு இசைப் பயணத்தின் இந்த இசைத் திருவிழா நிகழ்ச்சிக்கான அறிமுக விழா நடைபெற்றது.
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னிலையில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம் சரவணன், காரசாரம் உணவகத்தின் உரிமையாளர் திரு ஸ்ரீதரன், நிகழ்ச்சி ஏற்பாட்டளரான Horizon Connect திரு. கார்த்தி மற்றும் திருமதி.கவிதா முன்னிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
மே 4 ஆம் தேதி, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ள தேவா இசைத் திருவிழாவில் சபாஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன் ,அனுராதா ஸ்ரீராம், மனோ மற்றும் பிரபலமான பாடகர்களும் முக்கிய நடிகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அன்றைய அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, நம் நாட்டு கலைஞர்களான டார்கி குழுவினர்கள் மற்றும் Lockup கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க உள்ளனர்.