Latestமலேசியா

லோரியின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஆடவரை போலீசார் அடையாளம் கண்டனர்

கூலாய் , பிப் 17 – நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரெய்லரின் பின்புறம் ஆபத்தான முறையில் நின்று கொண்டு சென்ற நபரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நேற்று இரவு 12 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தமக்கு தெரியவந்ததாகக் கூலாய் வட்டார போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் டான் செங் லீ தெரிவித்தார். வியாழக்கிழமை காலை 10 மணியளவில் செனாய் நோக்கிச் செல்லும் இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலையின் 35ஆவது கிலோமீட்டரில் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவத்தின் போது, ​கங்கார் பூலாயிலிருந்து செனாய் தொழிற்பேட்டை பகுதியை நோக்கிச் செல்லும் ஸ்கேனியா லாரி ஓட்டுனர், தான் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின்புறத்தில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை உணரவில்லை என்றும் இச்சம்பவம் குறித்த காணொளியை தமது நண்பர் அனுப்பிவைத்த பின்னரே இதனை தாம் தெரிந்துகொண்டதாக, 36 வயதுடைய அந்த லோரி ஓட்டுனர் தெரிவித்தார். அந்த லோரி ஓட்டுனர் கூலாய் குற்றவியல் விசாரணை மற்றும் போக்குரவத்து அமலாக்க துறையின் விசாரணையில் கலந்துகொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக டான் செங் லீ கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!