![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-02-Mar-2024-01-43-PM-6021.jpg)
கோலாலம்பூர், மார்ச் 2 – பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி 20ஆம் தேதி ஹடி அவாங் வெளியிட்ட அறிக்கை 1948ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் 4 ஆவது விதி உட்பிரிவு 1 இன் கீழ் மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்திற்கு எதிராக இருப்பதால் அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரஸாருதீன் கூறினார். எனினும் ஹடி அவாங் உடல் நலமின்றி இருப்பதால் அவரிடமிருந்து வாக்கு மூலம் எதுவும் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது அவர் உடல் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று திரெங்கானு மாராங்கிலுள்ள மஸ்ஜித் ருசிலாவில் வெள்ளிக்கிழமை தொழுகை உரையை சுமார் ஒரு மணி நேரம் ஹடி அவாங் ஆற்றியதாக கூறப்பட்டது. இம்மாதம் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பாஸ் தலைவர் டத்தோ அப்துல் ஹலீம் மூலமாக ஹடி அவாங்கிற்கு சிலாங்கூர் சுல்தான் ஷருபுதீன் இட்ரிஸ் ஷா தமது அதிருப்தியை தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியிருந்தார். பிப்ரவரி 27ஆம் தேதி ஹடி அவாங் வெளியிட்ட அறிக்கை மலாய் ஆட்சியாளர்களின் மனதை புண்படுத்தியிருப்பதோடு மலேசியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்தியிருப்பது குறித்து சுல்தான் ஷருபுதீன் பாஸ் தலைவருக்கு எச்சரித்கை விடுத்திருந்தார்.