![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-05-Dec-2023-01-39-PM-9136.jpg)
பினாங்கு, டிச 5 – கடந்த சனிக்கிழமை பினாங்கு விமான நிலையத்தின் குடிநுழைவு முகப்புகளில் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் விரக்தியடைந்து சமூக வலைத்தளத்தில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அங்கு செயல்பட்டு வந்த 12 குடிநுழைவு முகப்புகளில் 5 மட்டுமே செயல்பட்டதால் இவ்வளவு தாமதம் ஏற்பட்டு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நிலைமையை சமாளிக்க அங்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்படாததால், பயணிகள் செய்வதறியாது அங்கேயே மாட்டிக் கொண்டதாகவும் பயணிகள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
ஆனால் மறுநாளே இந்நிலைமை சரிசெய்யப்பட்டு அனைத்து முகப்புகளும் மீண்டும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்துரைத்துள்ள பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநுழைவுத் துறையின் முகப்புகளும் செயல்பட வேண்டும். இல்லையேல் இந்த சூழல் மீண்டும் ஏற்படுவதை தவிரிக்க முடியாது. எனவே, குடிநுழைவுத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.