![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-11-06-AM-8718.jpg)
காஜாங், மே-29, சிலாங்கூர், செமஞேவில் உள்ள Bukit Broga மலையில் திங்கட்கிழமை மாலை ஏறும் போது பள்ளத்தில் தவறி விழுந்து பதின்ம வயது பையன் உயிரிழந்தான்.
மலையேறும் போது வழித்தவறி காணாமல் போனதாக பராமரிப்பாளரிடம் இருந்து புகார் கிடைத்ததை அடுத்து, தேடி மீட்கும் பணியில் இறங்கிய தீயணைப்புத் துறை 16 வயது Adi Putra Effendi-யை சடலமாக மீட்டது.
காலை 8 மணிக்கு இதர மூவருடன் மலையேறத் தொடங்கிய Adi Putra 11 மணிக்கு மேல் வழித்தவறி காணாமல் போயிருக்கிறான்.
நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த தேடுதலின் போது 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் சுயநினைவற்ற நிலையில் Adi Putra கண்டெடுக்கப்பட்டான்.
அவன் விழுந்த இடம் Bukit Broga நுழைவாயில் கதவில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு பிற்பகல் 3.30 மணி வாக்கில் Adi Putra மேலே கொண்டு வரப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிபடுத்தியது