![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-02-Apr-2024-01-23-PM-2216.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல் 2 – புதிய ஆசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு விரைவில் வெளியிடும்.
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுக் காண, தமதமைச்சு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றென, கல்வி அமைச்சர் பட்சினா சிடேக் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றக்குறை பிரச்சனை, தீர்வுக் காண முடியாத பிரச்சனை அல்ல. கல்வி அமைச்சின் திட்டமிடல் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில், அப்பிரச்சனைக்கு தீர்வுக் காணும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் நடைபெற்று வருவதாக பட்லினா சொன்னார்.
குறிப்பாக, நாடு முழுவதும் இருக்கும் காலி இடங்களை நிரப்ப, கல்வி அமைச்சால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்தாண்டு, பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுக் காணும் வகையில், 20 ஆயிரத்து 171 புதிய நிரந்தர மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமித்துள்ளதாக, மார்ச் 27-ஆம் தேதி பட்லினா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.