![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-17-Apr-2024-04-46-PM-6350.jpg)
புளோரிடா, ஏப்ரல் 17 – அமெரிக்கா, புளோரிடாவிலுள்ள, வீடொன்றின் கூரையைப் பிய்த்துக் கொண்டு, அதிவேகமாக உள்ளே விழுந்த பொருள், விண்வெளி குப்பை தான் என்பதை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டு, மார்ச் எட்டாம் தேதி, புளோரிடாவிலுள்ள, வீடொன்றை 1.6 பவுண்டுகள் எடைகொண்ட மர்ம பொருள் ஒன்று தாக்கியது.
எனினும், அச்சம்பவத்தில் வீட்டில் இருந்த யாரும் அதிஷ்டவசமாக காயமடையவில்லை.
சிலிண்டர் வடிவிலான அந்த பொருள் குறித்து, கென்னடி விண்வெளி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
அதன் வாயிலாக, அது 2021- ஆம் ஆண்டு அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து சென்ற பொருள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக அதுபோன்ற விண்வெளி “குப்பைகள்’, பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும் எனகூறப்படுவது வழக்கமாகும்.
எனினும், வளிமண்டல வெப்பத்தை தாண்ட, அந்த பாகம் புளோரிடாவில் விழுந்ததாக நாசா கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.