Latestமலேசியா

பெட்ரோல் நிலையத்தில் உடனடி மீ சமைத்தனர் நால்வருக்கு 500 ரிங்கிட் அபராதம்

பெந்தோங் , மே 21 – பெட்ரோல் நிலையத்தில் உடனடி மீ சமைத்த குற்றத்தை பல் மருத்துவ உதவியாளர் ஒருவர், சொத்துடமை முகவர் உட்பட நான்கு தனிப்பட்ட நபர்கள் ஒப்புக் கொண்டனர். மற்றவர்களுக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்கள் அனைவருக்கும் 500 ரிங்கிட் அபராதம் விதிப்பதாக Bentong மாஜிஸ்திரேட் Nadhratun Naeiem Zainan தீர்ப்பளித்தார்.

மே 12 ஆம்தேதி நண்பகல் 1.30 மணியளவில் எரிவாயு அடுப்பை பயன்படுத்தி கெந்திங் மலை Taman Cendawan பெட்ரோல் நிலையத்தில் மீ சமைத்த குற்றத்தை 24 வயதுடைய Fadhli Zill Ikhram, Nurfatin Indina , Nur Anis Saleh, 23 வயதுடைய Nur Azira Azmar ஆகியோர் ஒப்புக் கொண்டனர். ஆடவர் மற்றும் பெண்களைக் கொண்ட குழுவினர் உடனடி மீயை சமைத்து அந்த பெட்ரோல் நிலையத்தில் மற்றவர்களுக்கு பரிமாறும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நால்வரில் ஒருவர் இது தொடர்பான காணொளியை முகநூலில் பதிவிட்டதாக நம்பப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!