Latestமலேசியா

மனைவியின் காதலன் கொலை : தெலுக் இந்தானில், இந்திய ஆடவருக்கு எதிராக குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், ஏப்ரல் 18 – மனைவியின் காதலனைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், பெலாஞ்சான் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு எதிராக, பேராக், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 42 வயது டி.தனபாலன் எனும் அவ்வாடவரிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

இம்மாதம் ஐந்தாம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், இரு பிள்ளைகளுக்கு தந்தையான தனபாலன், லங்காப், ஜாலான் தாமான் டத்தோ நஸ்ரி எனுமிடத்தில், 32 வயது எஸ். சுந்தரராஜ் எனும் நபரை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் நீருபிக்கப்பட்டால், 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

தனபாலனை ஜாமினில் விடுவிக்க இன்று நீதிமன்றம் மறுத்தவிட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மே 15-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, தனது மனைவிக்கு தொந்தரவு கொடுத்த ஆடவனை, அப்பெண்ணின் கணவன் கொலை செய்ததாக நம்மப்படுவதாக, ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மாட் அட்னான் பஸ்ரி கூறியிருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!