![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-04-09-PM-1405.jpg)
மலாக்கா, ஜூன் 4 – பெண் ஒருவருக்கு, “டத்தோ” பட்டத்தை வாங்கி தருவதாக கூறி 47 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு வாங்கியதாக, அரசாங்க ஊழியர் ஒருவருக்கும், குத்தகையாளருக்கும் எதிராக இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 58 வயது லோ கியா செங் மற்றும் 42 வயது ரசிசாம் அலி ஆகிய அவ்விருவரும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
அவர்கள் இருவரும், ஏமாற்றும் பொதுவான நோக்கத்துடன், டத்தோ பட்டத்தை கொண்டு வரும், மலாக்கா மாநில கெளரவ விருதை பெற்று தருவதாக கூறி 38 வயது சீட் சியாங் லின் எனும் பெண்ணை ஏமாற்றி கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2018-ஆம் ஆண்டு நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது ஓராண்டும், அதிகபட்சம் பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோடு, பிரம்படிகளும், அபராதமும் விதிக்கப்படலாம்.
கியா செங்கை 30 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையிலும், ரசிசாமை 15 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை ஜூலை ஐந்தாம் தேதி செவிமடுக்கப்படும்.