Latestமலேசியா

மலேசியா வருகை புரிவதற்கு பாதுகாப்பான நாடாகும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

கோலாலம்பூர், ஏப் 27 – வருகை புரிவதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்வதற்கு மலேசியா பாதுகாப்பான நாடாக இல்லையென அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறியிருந்தாலும் பயணம் செய்வதற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் மலேசியா முதல் பிரிவில் இடம்பெற்றிருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு தெரிவிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எந்தவொரு மாற்றமும் இல்லையென அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அச்சத்திற்கு மிகவும் குறைந்த நிலை என்பதை முதல் பிரிவுக்கான ஆலோசனை என அமெரிக்க தூதரகத்தின் பயண விவகார தொடர்பு பிரிவின் ஆலோசனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணிகள் அனைத்துலக ரீதியில் எங்கு பயணம் மேற்கொண்டாலும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு பாதுகாப்பு அம்சத்தில் விழிப்பபாக விழிப்பாக இருக்க வேண்டும் என்ற நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பதை பயண ஆலோசனையின் முதல் பிரிவு வலியுறுத்துகிறது. பயண ஆலோசனையில் 4ஆவது நிலைத்தான் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க பிரஜைகள் செல்லக்கூடாது அல்லது அந்த நாட்டிலிருந்து விரைவாக வெளியேறிவிட வேண்டும் என்று விடுக்கப்படும் ஆலோசனையை கொண்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!