
சபோபன் மெக்ஸிகோ, மே 15 – கடந்த திங்கட்கிழமை இரவு, மெக்சிகோ சபோபனிலுள்ள தனது சலூனிலிருந்து, டிக்டாக் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்த, டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸ் (Valeria Marquez) திடீரென்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட மார்க்வெஸ், தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு, இரத்தம் வழிய சரிந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பத்திற்குப் பிறகு, அவரின் டிக்டோக் நேரலை மர்ம நபர் ஒருவரால் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாட்டு சபையின் (UN) அறிக்கையின்படி, மெக்ஸிகோவில் குறிப்பாக சபோபன் நகரில் பெண் கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மெக்சிகன் அதிகாரிகள், இக்கொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதோடு, மனித உரிமை ஆர்வலர்களும் பெண் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.