தோக்யோ, பிப் 19 – TVET எனப்படும் தொழிற்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக அதிகமான மலேசிய மாணவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். சிறத்த கல்வி அடைவு நிலையை பெறாத மாணவர்கள்தான் TVET கல்வியை மேற்கொள்வார்கள் என்ற தவறான தோற்றத்தை அகற்றுவதற்காக தொழிற்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி உருமாற்றத்திற்கான அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கையாக இத்திட்டம் இருப்பதாக அவர் கூறினார். சுதந்திரத்திற்கு முன்னதாக TVET கல்வி தொடங்கியிருந்தாலும் இதற்கு முன்னர் அரசாங்கத்தின் முயற்சிகளில் தீவர கவனம் செலுத்தப்படவில்லை.
TVET கல்வித்துறையின் மூலம் சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் உயரிய வருமானத்தை பெறமுடியும் என்ற உறுதியை பெற்றோர்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்தின் உருமாற்ற நடவடிக்கை இருப்பதாக ஜப்பானில் 70 மலேசியர்களை சந்தித்த பின் Ahmad Zahid தெரிவித்தார். ஜப்பான் உட்பட வெளிநாடுகளில் TVET துறையில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கை செலவின தொகையை அதிகரிப்பது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக TVET மீதான தேசிய மன்றத்தின் தலைவருமான சாஹிட் ஹமிடி கூறினார்.