Latestமலேசியா

2 வயது குழந்தை உட்பட10 வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் கைது

கோலாலம்பூர், ஜன 13 – பங்சார் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பிச்சைக்காரர்களை குடிநுழைவுத்துறை கைது செய்தது. பங்சார், ஜாலான் அராவிலுள்ள மஸ்ஜிட் சைதினா அபுபக்கர் பள்ளிவாசல் வளாகத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது 13 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 2 முதல் 41 வயதுடைய 10 பிச்சைக்காரர்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக ருஸ்லின் ஜூசோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!