கோலாலம்பூர், ஜன 13 – பங்சார் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பிச்சைக்காரர்களை குடிநுழைவுத்துறை கைது செய்தது. பங்சார், ஜாலான் அராவிலுள்ள மஸ்ஜிட் சைதினா அபுபக்கர் பள்ளிவாசல் வளாகத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது 13 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 2 முதல் 41 வயதுடைய 10 பிச்சைக்காரர்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக ருஸ்லின் ஜூசோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Related Articles
விமான சாய்வு இருக்கைகள் வேலை செய்யவில்லை; ஹைதரபாத் தம்பதிக்கு இழப்பீடு வழங்க Singapore Airlines நிறுவனத்துக்கு உத்தரவு
51 mins ago
நாய் துரத்தியதால் சாலையின் குறுக்கே ஓடிய சிறுவன்; காரால் மோதப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பினான்
57 mins ago