Latestஉலகம்

அமெரிக்காவில் 2 நாட்களாகக் காணாமல் போன 1 வயது குழந்தை உணவின்றி உயிர் பிழைத்த அதிசயம்

லூசியானா, ஜூலை-15, அமெரிக்காவில் 2 நாட்களாகக் காணாமல் போன 1 வயது குழந்தை நெடுஞ்சாலையோரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

உடலில் பூச்சிக் கடிகளுடன் சாலையோரமாக தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தையை, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனமோட்டுநர் கண்டெடுத்தார்.

ஏதோ பொம்மை கிடப்பதாக எண்ணி அதனை நெருங்கிப் பார்த்த போது, குழந்தை அசைவதைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.

அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போது தான், ஜூலை 8-ஆம் தேதியிலிருந்தே அக்குழந்தைத் தேடப்படுவது தெரிய வந்தது.

முன்னதாக அக்குழந்தையின் 4 வயது அண்ணன், லூசியானா-டெக்சஸ் (Louisiana -Texas) மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஏரியொன்றில் இறந்துக் கிடந்தான்.

இதையடுத்து கைதான அவர்களின் தாயான 25 வயது ஆலியன் ஜேக் (Aaliyah Jack) மீது இரண்டாம் கட்ட கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குழந்தைக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உண்ண உணவின்றி, ஆகாரமின்றி 2 நாட்கள் தனியாக உயிர் பிழைத்த அக்குழந்தை உண்மையிலேயே ‘அதிசயக்’ குழந்தை தான் வருணிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!