கோலாலம்பூர். ஏப் 8 – காகிதத்தை வெட்டும் கத்தியின் மூலம் உள்நாட்டு ஆடவர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை C. Suresh Kumar , N.Siralan ஆகிய இரு நண்பர்கள் மறுத்தனர். நீதிபதி Nu’aman Mahmud Zuhudi முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 33 வயதடைய Sureshkumar மற்றும் 36 வயதுடைய N.Siralan மறுத்து விசாரணை கோரினர். ஏப்ரல் 1ஆம் தேதி காலை மணி 11.30 அளவில் பிரிக்பீல்ட்ஸ்ஸிலுள்ள அலுவலகத்தில் நுழைந்து 36 வயதுடைய J. Melvin Dass என்பவரை ஆயுத முனையில் மிரட்டி 242,222 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்து சென்றதாக Sureshkumar மற்றும் Siralan மீது குற்றச்சாட்டப்பட்டது. அவர்கள் இருவருக்கும் 7,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு மே 27ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.