Latestஉலகம்

இந்தியாவில் கடும் வெப்ப அலை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுரை

நியூ டெல்லி, மே 28 – இந்தியாவில் கடும் வெப்ப அலை பல மாநிலங்களை பாதித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் வெப்ப அதிர்ச்சியால் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை கடந்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பண்டா நகரில் 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மோடி எச்சரித்துள்ளார்.

தொடர்ச்சியான வெப்ப அலை காரணமாக தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீ அபாயமும் அதிகரித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!