Latestஉலகம்

உலகின் மிக வயதான மனிதர், வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா ; தனது 114-வது அகவையில் காலமானார்

வெனிசுலா, ஏப்ரல் 4 – 2022-ஆம் ஆண்டு, உலகின் வயதான மனிதர் என உலக கின்னஸ் சாதனை புத்தகத்தால் மகுடம் சூட்டப்பட்ட வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, கடந்த செவ்வாய்கிழமை, தமது 114-வது அகவையில் காலமானார்.

அதனை, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ தமது X சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி, உலகில் உயிர் வாழும் மிக வயதான மனிதராக, அப்பொழுது 112 வயதான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா என, உலக கின்னஸ் சாதனை புத்தகம் உறுதிச் செய்தது.

11 பிள்ளைகளுக்கு தந்தையான ஜுவான் விசென்டே பெரெஸ் மோராவிற்கு, 18 பேரப்பிள்ளைகளும், 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

1909-ஆம் ஆண்டு, மே 27-ஆம் தேதி, தச்சிரா மாநிலத்திலுள்ள, எல் கோப்ரே எனும் நகரில் அவர் பிறந்தவர் ஆவார்.

பாரம்பரியமாக, கருப்பு மற்றும் காப்பி விவசாயத்தில் ஈடுபட்டு வந்த குடும்பத்தில் பிறந்தவரான அவர், தனது ஐந்தாவது வயதிலேயே விவசாயத்தில் கால் பதித்ததாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!