கோலாலம்பூர், டிச 24 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இணையமாட்டோம் என பாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வாக்குறுதி அளிக்கப்பட்ட சீரமைப்புகளை அமல்படுத்துவதில் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதாக பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ருஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
அதோடு இப்போதைய அரசாங்கம் மலாய்க்காரர்களின் ஆதரவை பெறும் ஆற்றலையும் கொண்டிருக்கவில்லையென அவர் கூறினார். அம்னோ மலாய்க்காரர்களின் ஆதரவை பெறமுடியவில்லை என்பதோடு அக்கட்சி DAPக்கு நிகராகத்தான் இருப்பதாக இட்ருஸ் அஹ்மத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.