Latestமலேசியா

கவலை வேண்டாம்; மிகச் சிறந்த SPM மாணவர்களில் ஒருவரும் விடுபட மாட்டார்கள்- கல்வி அமைச்சு உத்தரவாதம்

கோலாலம்பூர், ஜூலை-8, SPM தேர்வில் 10A பெற்றும் மேற்கல்விப் பயில இன்னமும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களின் பிரச்னை தீர்க்கப்படுமென கல்வி அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது.

எனவே அது குறித்து கவலைப்பட வேண்டாம் என அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) மாணவர்களையும் பெற்றோர்களையும் கேட்டுக் கொண்டார்.

மெட்ரிகுலேஷன் இடங்களுக்கான மேல்முறையீட்டு முடிவுகள் வந்து விட்டன.

ஆனாலும், 10A பெற்ற மாணவர்களில் இன்னும் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என தெரிகிறது.

அப்பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட்டு உரிய இடங்கள் வழங்கப்படுமென அமைச்சர் சொன்னார்.

10A பெற்ற மாணவர்களில் ஒருவரும் மேற்கல்வி வாய்ப்பிலிருந்து விடுபடக் கூடாது என்பதே மடானி அரசாங்கத்தின் கடப்பாடு.

அதுவும், பூமிபுத்ரா மாணவர்களின் இட ஒதுக்கீட்டை பாதிக்காமல் மற்ற மாணவர்களுக்கு இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது தைரியமான நடவடிக்கை என்றார் அவர்.

SPM தேர்வில் 10A மற்றும் அதற்கும் மேல் மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற அனைத்து மாணவர்களும், இனபாகுபாடின்றி மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பைப் பெறுவர் என அண்மையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!