Latestமலேசியா

காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை பதிவுச் செய்த மனைவி, பிள்ளையை தாக்கிய ஆடவன் கைது

அராவ், நவம்பர் 24 – பெர்லீஸ், தாமான் டெசா பாவொவில், காதலியை தங்கள் படுக்கை அறைக்கு அழைத்து வந்த ஆடவன் ஒருவனின் செயலை ஒளிப்பதிவுச் செய்த அவனது மனைவி குத்தி காயப்படுத்தப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மாலை மணி 5.10 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்பொழுது தான் வீடு திரும்பிய அந்த 53 வயது பெண், படுக்கை அறையிலுள்ள, குளியல் அறையில், தனது 49 வயது கணவர் பெண் ஒருவரை மறைத்து வைக்க முயல்வதை கண்டு சினமடைந்தார்.

உடனடியாக அச்சம்பவத்தை அவர் ஒளிப்பதிவுச் செய்ய முற்பட்ட போது, அவ்வாடவன் அவரது கைப்பேசியை சுவரில் அடித்து உடைத்ததோடு, அவரை முகத்தில் அரைந்து, குத்தி காயப்படுத்தி, தரையில் பிடித்து தள்ளியதாக, அராவ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் மொசின் மாட் ரோடி தெரிவித்தார்.

சம்பவத்தின் போது தாயாருக்கு உதவ முற்பட்ட அவர்களின் 16 வயது மகனும், அவ்வாடவனால் தாக்கப்பட்டார்.

அச்சம்பவம் தொடர்பில் அராவ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த அப்பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் பின்னர் கங்கார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மனைவியையும், மகனையும் தாக்கிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!