![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-01-Jul-2024-08-17-PM-4194.jpg)
புத்ரா ஜெயா, ஜூலை 1 – சனிக்கிழமையன்று கெந்திங் மலையிலிருந்து திரும்பியபோது ஜாலான் கெந்திங் மலை சாலையின் 16.6 ஆவது கிலோமீட்டரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தின் பெர்மிட் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காலாவதியானதோடு அந்த பேருந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ( Anthony Loke ) தெரிவித்திருக்கிறார். சட்டவிதிகளை அந்த சுற்றுலா பேருந்த நிறுவனம் பின்பற்றவில்லை என்று தெளிவாகியிருப்பதோடு இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உயிரிழந்ததால் நாட்டின் தோற்றத்தையும் பாதித்திருப்பதால் அந்த பேருந்த நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி தரை பொது போக்குவரத்து நிறுவனத்திற்கு பணிக்கப்பட்டிருப்பதாக அந்தோனி லோக் கூறினார். அந்த நிறுவனத்திற்கு இருக்கும் பெர்மிட்டிற்கு எதிராக மட்டுமின்றி சாலை போக்குவரத்து துறையில் அமைச்சு மூலமாகவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவிருக்றோம் என அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டின் தரை போக்குவரத்து சட்டத்தின் 42ஆவது பிரிவு உட்பிரிவு (2)ன் கீழ் அந்த சுற்றுலா பேருந்த நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டை கொண்டுவருவதற்கு அந்த சட்டம் பயன்படுத்தப்படும் என இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்தோனி லோக் தெரிவித்தார். 42ஆவது பிரிவின் உட்பிரிவு (2) இன் கீழ் இடம்பெற்றுள்ள நிபந்தனையை பின்பற்றாத பேருந்து நிறுவனத்திற்கு எதிராக 500,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாதாத சிறை தண்டனை அல்லது அவையிரண்டும் விதிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.