பெட்டாலிங் ஜெயா, மார்ச்-26, சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இரவு கேளிக்கை மையமொன்றில் தெரியாமல் இடித்து விட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வெளிநாட்டவர் முகத்தில் குத்தியதில், உள்ளூர் ஆடவர் உயிரிழந்தார்.
Sea Park-கில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
40 வயது மதிக்கத்தக்க அந்த வெளிநாட்டு ஆடவர், அந்த உள்ளூர் ஆடவரின் உடலை இடித்து விட்டார்; இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, இடிபட்டவர் தனது காலால் லேசாக உதைக்க, அந்த வெளிநாட்டு ஆடவருக்கு கோபம் தலைக்கேறி, இடிபட்டவரின் முகத்தில் ஓங்கிக் குத்தினார்.
அதில் சுருண்டு விழுந்த உள்ளூர் ஆடவர், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்.
கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைதுச் செய்யப்பட்ட அந்த வெளிநாட்டு ஆடவர் விசாரணைக்காக வெள்ளிக் கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அச்சண்டையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அவரின் நண்பரும் விசாரணைக்காகக் கைதானார்.