Latestமலேசியா

கொலை செய்யப்பட்ட நுர் பாராவின் கைத்தொலைபேசி, உலு சிலாங்கூர் நீரோடையில் கண்டுப்பிடிப்பு

உலு சிலாங்கூர், ஜூலை 17 – கொலை செய்யப்பட்ட நுர் பாரா கார்த்தினி அப்துல்லாவின் ( Nur Farah Kartini Abdullah) கை தொலைபேசி Felda Gedangsa நீரோடையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. போலீஸ் தடயயியலாளர் மற்றும் முக்குளிப்பு குழுவினர் அந்த கைத்தொலைபேசியை தேடி கண்டுப்பிடிப்பதில் வெற்றி பெற்றனர். அந்த நீரோடைப் பகுதியில் சுமார் அரைமணி நேரம் தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் அவர்கள் அந்த கைதொலைபேசியை கண்டுப்பிடித்தனர்.

நுர் பாரா கொலையில் கைது செய்யப்பட்ட சந்தேகப் பேவழியான ஆடவன் ஒருவன் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய பின் அந்த கைதொலைபேசியை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டது. கோலாகுபு பாரு தீயணைப்பு மற்றும் முக்குளிப்பு பிரிவினரின் உதவியோடு அந்த நீரோடையில் பாரா கொலைக்கான இதர சாட்சிப் பொருட்களை தேடி கண்டறியும் நடவடிக்கை இன்று காலை 10 மணி முதல் தொடங்கிது. இதனிடையே அந்த நீரோடைப் பகுதியை இன்று பார்வையிடவிருக்கும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் ( Husssien Omar Khan ) அங்கு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!