Latestமலேசியா

கோலாலம்பூரில் மரம் விழுந்து இரு மோட்டார் சைக்கிள்கள் சேதம்

கோலாலம்பூர், ஜூன் 28 – இன்று மாலையில் கோலாலம்பூரில் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் ஒரு வர்த்தக மையத்திற்கு முன்புறப் பகுதியில் மரம் விழுந்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இன்று மாலை மணி 3.59 அளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக கோலாலம்பூர் சிறப்பு நடவடிக்கை மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரம் விழுந்த சம்பவத்தினால் பாதசாரிகளின் பாதையில் எவரும் செல்லமுடியாமல் வழிமறிக்கப்பட்டிருந்ததோடு, Honda RS மற்றும் Honda ADV ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கிய நிலையில் காணப்பட்டதாக தித்திவங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிரிவின் முதிர் நிலை அதிகாரி முகமட் ரெமி சே ஹாட் ( Mohd Remi Che Hat ) கூறினார். எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!