![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-03-Jul-2024-07-41-PM-963.jpg)
கோலாலம்பூர், ஜூலை 3 – கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையை சுற்றி, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்நிய நாட்டவர்களை குறி வைத்து, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம், ஒன்பது பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், காய்கறிகளும், பழங்களும் அடங்கும்.
அதே சமயம், முறையான உரிமம் இன்றி வியாபாரத்தில் ஈடுபட்டதற்காக, இரு அபராத பதிவுகளும் வெளியிடப்பட்டதாக, ஓர் அறிக்கையின் வாயிலாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.
அனுமதி இன்றி வியாபார தளங்களை நிறுவிய சம்பவம் தொடர்பில், மூன்று எச்சரிக்கை கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க துறை, சுகாதார துறை, சுற்று சூழல் துறை ஆகியவை பத்து தொகுதி அலுவலகத்துடன் இணைந்து அந்த சோதனையை மேற்கொண்டன.
தலைநகரில், அந்நிய நாட்டவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென, கோலாலம்பூர் மாநகர் மன்றம் கூறியுள்ளது.