![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-12-Jun-2024-08-58-AM-7453.jpg)
கோலாலம்பூர், ஜூன்-11, கோலாலம்பூர் பசார் போரோங் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 7 வெளிநாட்டவர்களின் பொருட்களுக்கு DBKL சீல் வைத்துள்ளது.
அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான DBKL-லின் நேற்றைய அதிரடி சோதனையின் போது அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒத்துழைப்போடு நடைபெற்ற அச்சோதனையின் போது, பொது இடத்தில் வியாபாரிகள் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டன.
சம்பந்தப்பட்ட 7 வியாபாரிகளுக்கும் அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக செராசில் உள்ள DBKL-லின் சீல் கிடங்குக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
இது போன்ற அமுலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என DBKL தெரிவித்தது.