Latestமலேசியா

கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் மலாக்காரரை வேட்பாளராக நிறுத்துவீர் சிலாங்கூர் பக்காத்தான் துணைத்தலைவர் வலியுறுத்து

கோலாலம்புர் , மே 16 – எதிர்வரும் மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், Kuala kubu Bahaaru சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் மலாய்க்காரர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு DAP பரிசீலிக்க வேண்டும் என சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் Borhan Aman Shah கோரிக்கை விடுத்துள்ளார். Kuala Kubu Baharu இடைத்தேர்தலில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மலாய் வேட்பாளரை நிறுத்த DAP பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த தொகுதியிலுள்ள மலாய்க்கார வாக்காளர்களின் அதிமாக இருப்பதையும் , தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் மேற்கோள் காட்டி, இது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தாம் தனிப்பட்ட முறையில் நம்புவதாகக Borhan கூறினார். இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல விவகாரங்களை எழுப்பக்கூடும் என்பதால் அந்த தொகுதியை தற்காத்துக் கொள்வது உத்தரவாதம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இடைத்தேர்தல் கவனத்தின் மையமாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்ததால், வேட்பாளர் முழுநேர அரசியல்வாதியாக இருப்பதை விட தொழில்முறை நிபுணராக இருக்க வேண்டும் என்று Borhan கூறினார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP யின் Lee Kee Hiong மார்ச் 21 ஆம் தேதி புற்று நோயினால் இறந்ததைத் தொடர்ந்து கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!