![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-19-Jun-2024-04-20-PM-6199.jpg)
பெலாகா, ஜூன் 19 – சரவாக், சிபு, ஜெராம் மெஞ்ஜாவா (Jeram Menjawah) பகுதியில், படகு கவிழ்ந்த சம்பவத்தில், காணாமல் போன மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மணி 8.22 வாக்கில், சம்பவ இடத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில், 30 வயது ரூபன் அப்பாரூவின் உடல் மீட்கப்பட்டதை, சரவாக் மாநில தீயணைப்பு நடவடிக்கை அறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ரூபனின் உடலை மீட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், மேல் நடவடிக்கைகாக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அச்சம்பவத்தில் காணாமல் போன மற்றொரு நபரான, 36 வயது பாலவிஷ்ணு பெர்மாலூவின் உடல்,
நேற்று பிற்பகல் மணி 1.15 வாக்கில், சம்பவ இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில், பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.