Latestமலேசியா

சித்திரை புத்தாண்டில் மலேயேறும் நடைப்பயணம் ம.இ.கா இளைஞர்கள் திரளாக பங்கேற்பு

கோலாலம்பூர், ஏப் 16 – இந்திய இளைஞர்களிடையே மலையேறுவது மற்றும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் Pertubuhaan Penggerak Sebaya selangor , ம.இ.கா தேசிய இளைஞர் பிரின் விளையாட்டுப் பிரிவும், சிலாங்கூர் ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து இது தொடர்பான பயிற்சியை சித்திரை புத்தாண்டு தினத்தில் Templer Park பூங்காவில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவோடும் அவரது ஆலோசனையோடும் இந்த நிகழ்வு மிகவும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ம.இ.க தேசிய இளைஞர் பகுதியின் துணைத் தலைவர் ஆண்ட்ரு டேவிட், தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர் அர்வின் கிருஷ்ணன் , சிலாங்கூர் ம.இ. கா இளைஞர் பிரிவின் தலைவர் சுந்தர், கோம்பாக் இளைஞர் பிரிவு தலைவர் கோபி ராஜ் உட்பட பலர் இப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் பங்காற்றினர். இந்திய சமுகத்தின் சமூக அரசியல் நடவடிக்கையில் கவனம் செலுத்தும் இளைஞர்கள் உடற்பயிற்சியிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ம.இ,கா தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் ஆண்ட்ரு டேவிட் தெரிவித்தார். புத்தாண்டு தினத்தில் புத்தாண்டு சிந்தனையோடு இளைஞர்களிடையே உடற்பயிற்சி சிந்தனையை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில மலையேறும் சங்கத்தின் தலைவர் ஜி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிகழ்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது குறித்தும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!