Latestமலேசியா

சிமெண்ட் கலவை இயந்திரத்தில் விழுந்த ஆடவர் மரணம்

ஷா அலாம், ஏப் 18 – Shah Alam , Seksyen 35 இல் ,தொழிற்சாலையிலுள்ள சிமெண்ட் கலவையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று காலை மணி 11.44 அளவில் பொதுமக்களிடமிருந்து இந்த தகவலைப் பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். இறந்து கிடந்த அந்த ஆடவரின் உடலில் சிலாங்கூர் தடயவியல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவரது வலது முழங்கை மற்றும் தலை துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் போராடியதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்பதோடு உடலில் ஏற்பட்ட காயங்களினால் மரணம் அடைந்துள்ளார்.

அந்த ஆடவர் சொந்தமாகவே சிமெண்ட் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என Mohd Iqbal வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இடது கை பகுதியில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து இறந்தவரின் அடையாளம் அவரது வாரிசுதாரர் மூலம் கண்டறியப்பட்டது. சவப் பரிசோதனைக்காக மரணம் அடைந்தவரின் உடல் Shah Alam மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக Mohd Iqbal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!