Latestமலேசியா

செலாயாங் பேரங்காடியில் பெண் மானபங்கம்; போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 8 – செலாயாங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் தாம் மானப்பங்கப்படுத்தப்பட்டதாக பெண் ஒருவர் கூறிக்கொண்டார். செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய அந்த பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அகமட் சுகர்னோ முகமட் ஷஹாரி ( Ahmad Sukarno Mohd Zahari) தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 354 ஆவது விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு இச்சம்பவம் குறித்து அந்த பேரங்காடியின் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!