Latestமலேசியா

ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே விரைவுப் பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்

கோலாலம்பூர், ஜூன்-12, PLUS நெடுஞ்சாலையின் ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில், விரைவுப் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட எழுவர் காயமடைந்தனர்.

தாய்லாந்தின் Hatyai-யில் இருந்து TBS நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்து, காலை 6.17 மணியளவில் டூத்தா டோல் சாவடியைத் தாண்டியதும் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலைத் தடுப்பை மோதியது.

அப்போது ஓட்டுநர் உட்பட 7 ஆடவர்கள் பேருந்தில் இருந்தனர்.

அவர்களைத் தீயணைப்பு மீட்புத் துறை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது.

ஒரு வெளிநாட்டவர் உள்ளிட்ட எழுவரும் சிராய்ப்புக் காயங்களுக்கே உள்ளாகி, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!