![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-12-Jun-2024-02-02-PM-9.jpg)
கோலாலம்பூர், ஜூன்-12, PLUS நெடுஞ்சாலையின் ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில், விரைவுப் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட எழுவர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் Hatyai-யில் இருந்து TBS நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த விரைவுப் பேருந்து, காலை 6.17 மணியளவில் டூத்தா டோல் சாவடியைத் தாண்டியதும் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலைத் தடுப்பை மோதியது.
அப்போது ஓட்டுநர் உட்பட 7 ஆடவர்கள் பேருந்தில் இருந்தனர்.
அவர்களைத் தீயணைப்பு மீட்புத் துறை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது.
ஒரு வெளிநாட்டவர் உள்ளிட்ட எழுவரும் சிராய்ப்புக் காயங்களுக்கே உள்ளாகி, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.