ஜோகூர் பாரு, ஜனவரி 10 – ஜோகூர் பாருவில், குழந்தையை பிரசவிக்க வேண்டும் எனும் பெண் ஒருவரின் ஆசை நிராசையானது.
விபத்தில் அவர் உயிரிழந்ததே அதற்கு காரணம் ஆகும்.
எனினும், அவரது கருவில் இருந்த ஒன்பது மாதக் குழந்தை காப்பாற்றப்பட்டு, மருத்துவமனை ஒன்றின் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதை, ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் சொஹைமி இசாக் உறுதிப்படுத்தினார்.
நேற்று முன்தினம், பின்னிரவு மணி 12.40 வாக்கில், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில், அப்பெண் பயணித்த ஹோண்டா சிவிக் ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் இருந்த மின்சார இணைப்பு பெட்டியை மோதி விபத்துக்குளானது.
அதனால், அந்த 28 வயது பெண், சிகிச்சை பலனின்றி, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எனினும், அப்பெண் பயணித்த காரை ஓட்டிச் சென்ற 30 வயது பெண்ணுக்கு சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்ட வேளை ; அவர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.