Latestமலேசியா

ஜோகூர் பாருவில் மதுபோதையில் காரோட்டி மோதித் தள்ளியதில் போக்குவரத்து போலீஸ்காரரின் இடுப்பு எலும்பு முறிந்தது

ஜோகூர் பாரு, ஜூலை-15, ஜோகூர் பாருவில் சாலைப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர், மதுபோதையில் காரோட்டிய நபரால் மோதப்பட்டு படுகாயமடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு JB, ஜாலான் பந்தாயில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தால், போக்குவரத்தைச் சீராக்கும் பணியில் அந்த போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட காரை இழுவை வண்டியில் (towing) ஏற்றிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த பழுப்பு நிற புரோட்டான் வீரா கார் திடீரென வலப்புற பாதையிலிருந்து இடது பக்கம் நுழைந்து அங்கு நின்றிருந்த போலீஸ்காரரை மோதியது.

மோதிய வேகத்தில் அவர் அக்காரின் கண்ணாடியில் தூக்கி வீசப்பட்டு, பின்னர் சாலையின் நடுவே போய் விழுந்தார்.

அதில், இடது இடுப்பு எலும்பு முறிந்து, தாடை, முகம், வலது கை ஆகிய இடங்களிலும் அவர் காயமுற்றார்.

30 வயது மதிக்கத்தக்க காரோட்டிக்கு இடது கையில் காயமேற்பட்டது.

மதுபோதையில்  வாகனமோட்டியதன் பேரில் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!