கோலாலம்பூர், மார்ச் 10 – தாய்மொழிப் பள்ளிகள் மீதான விரிவான மதிப்பீடு, தேசியக் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஆழமான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மாதிரிக்கான திட்டங்களை உள்ளடக்கி திட்டமிட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இன நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் அக்மல் சலே மூன்று கூறுகளை உள்ளடக்கிய திட்டத்தில் இந்த நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளார். இன நல்லிணக்கத்தை வளர்க்க ஒரே பள்ளிக்கல்வி முறையை அரசாங்கத்திற்கு அம்னோ இளைஞர் பிரிவு முன்மொழியும் என அவர் கூறினார்.
பள்ளிகள் பிரிந்து கிடப்பதால் இனப் பதட்டம் உருவாகிறது என்பது அம்னோ இளைஞர்களின் கருத்து என்று அவர் கூறினார். இந்த பிரிவினை மற்றும் பிளவுகளுக்கு மலேசியா முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இதுவென அவர் தெரிவித்தார். ஒற்றுமையை அடைவதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை. இது ஒரு நீண்ட, வளைவு மற்றும் சவாலான சாலை, ஆனால் அது ஒரு படியில் தொடங்குகிறது என அக்மல் சலே சுட்டிக்காட்டினார்.
தாய்மொழிப் பள்ளிகளில் ‘Bahasa Malaysia’வின் அடைவு நிலை உட்பட , தாய்மொழிப் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் விரிவான மதிப்பீடு இருக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வில் 1,800 க்கும் மேற்பட்ட தேசிய வகை பள்ளிகளும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார். தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்கான உரிமைகளைப் புறக்கணிக்காமல், பொதுவான பண்புகள் மற்றும் பற்று உணர்வின் அடிப்படையில் மிகவும் ஒருங்கிணைந்த கல்வி மாதிரியை உருவாக்குவதற்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்திற்கு அக்மல் சலே அழைப்பு விடுத்தார்.