கோலாலம்பூர், ஏப்ரல் 19 – வரும் ஞாயிற்றுகிழமை வரை, தீபகற்ப மலேசியாவிலுள்ள, அனைத்து மாநிலங்களிலும், சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளிலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கலாம் என, மெட்மலேசியா எனும் வானிலை ஆய்வுட் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால், மாலை தொடங்கி இரவு வரையில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய அடைமழை பெய்யலாம் என மெட்மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதே சமயம், அக்காலகட்டத்தில், நாள் முழுவதும், கோலாலம்பூர் உட்பட சிலாங்கூர், பேராக், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்க்களில், காலை முதல் மதியம் வரை மற்றும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய அடைமழை தொடர்ந்து பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சரவாக் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், ஈரப்பதமான வானிலையுடன், மழை பொழிவும் ஈற்படும் சாத்தியம் உள்ளது. குறிப்பாக, காபிட், லிம்பாங் உட்பட சபாவின் உள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளிலும் அதே வானிலை நீடிக்கலாம் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.