Latestமலேசியா

தீப்பற்றிய வீட்டில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆடவருக்குக் காயம்

சபாக் பெர்ணம், மார்ச்-4, சிலாங்கூர் சபாக் பெர்ணமில் தீப்பற்றிய வீட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஓர் ஆடவர் தீப்புண் காயங்களுக்கு ஆளானார்.

தாமான் அமானில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 50 வயது அந்நபரின் தலை, முதுகு மற்றும் கைகளில் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, அங்கு இரண்டி மாடி teres வீடு சுமார் 25% தீயில் சேதமடைந்திருந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குனர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் சொன்னார்.

தீ விட்டின் கீழ்தளத்தில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது.

தீ பரவியதும், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் இரும்பு கேட்டின் சாவியை எடுப்பதற்காக அவர் மேல் மாடிக்கு ஓடியிருக்கின்றார்.

அதில் உடலில் 30 விழுக்காடு தீப்புண் காயங்கள் ஏற்பட்ட அவரை, தீயணைப்புக் குழு காப்பாற்றி வெளியே கொண்டு வந்து மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தது.

தீ 20 நிமிடங்களில் முழுமையாக அணைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!