
குவாலா மூடா, ஜூன்-17 – நாயை சங்கிலியால் கட்டி மோட்டார் சைக்கிளின் பின்னால் தரதரவென இழுத்துச் சென்று வைரலான ஆடவரை, போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.
கெடா, சுங்கை பட்டாணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருப்பதாக, குவாலா மூடா போலீஸ் தலைவர் Hanyan Ramlan தெரிவித்தார்.
சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் காயங்களுக்கு ஆளான நாய், சிகிச்சைக்காக கால்நடை கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடை சேவைத் துறையின் கவனத்துக்கும் இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாக Hanyan கூறினார்.
முன்னதாக நாயை கட்டி இழுத்துச் சென்ற அவ்வாடவரை, சாலைப் பயனர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
மேலும் சிலர் அங்கு கூடி நாயைக் காப்பாற்றினர்.
அதை ஒரு பெண் வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்ற, அது வைரலானது.