![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2616230-700x470.jpeg)
மூவார், மார்ச் 29 – நெடுஞ்சாலையில் Spiderman போல் சாகசம் காட்டி ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய ஆடவன், ஜொகூர் மெர்சிங்கில் கைதுச் செய்யப்பட்டான்.
கம்போங் பந்தாயில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் 20 வயது அவ்விளைஞன் கைதானான்.
வடக்கே போகும் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின்
139-வது கிலோ மீட்டரில் அரங்கேறிய அவனின் Spiderman சாகசம், 29 வினாடி வீடியோ வாயிலாக முன்னதாக வைரலானது.
அதில் அவன் 2 கால்களையும் பின்னால் நீட்டியவாறு படுத்துக் கொண்டே மோட்டார் சைக்கிளோட்டுவது தெரிகிறது.
தகவல் கிடைத்து அவனது வீட்டில் வைத்தே கைதுச் செய்த போலீஸ், அவனது Yamaha 152ZR மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தது.
1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில் அவன் 3 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.