தெஹ்ரான், ஏப்ரல்-15, பதில் தாக்குதல் நடத்தினால் வரக்கூடிய விளைவுகள் இதை விட மோசமாக இருக்கும் என இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் பதிலடிக்கு ஆதரவளித்தால் அமெரிக்கப் பாதுகாப்புத் தளங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஈரானிய இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.
எனவே இவ்விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் அமெரிக்கா தள்ளியிருப்பதே நலம் என்றார் அவர்.
இவ்வேளையில் இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல் ஒரே இரவில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக அவர் சொன்னார்.
எனவே தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன; அதைத் தொடரும் எண்ணமில்லை.
ஆனால், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதைப் பொறுத்து தங்களின் அடுத்தத் திட்டம் அமையும் என்றார் அவர்.
ஈரான் – இஸ்ரேல் மோதலின் ஆரம்பமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை மற்றும் drone தாக்குதலைத் தொடுத்தது.
இதனால் மேற்காசியாவில் பதட்டம் அதிகரித்து போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.