ஈப்போ , ஏப் 4 – பள்ளி பேருந்து ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க தங்களுக்கு போக்குவரத்து அமைச்சு எல். பி. எஸ். (LPS) லைசன்ஸ்சை வெளியிடவேண்டும் என்று ஈப்போ இந்திய பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதன் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வழங்கப்பட்டு வந்த எல் .பி. எஸ். லைசன்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்த்து நிலைமையை சமாளிக்க கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பும் பாதிக்கப்பட்டதாக ஈப்போ இந்திய பள்ளி பேருந்து ஓட்டுனர் சங்கத்தின் தலவைர் ஜி. ராமதாஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிலைமையை சமாளிக்க எல் . பி. எஸ். லைசன்சை போக்கு வரத்து அமைச்சு வெளியிட்டால் வருமானம் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என ராமதாஸ் வலியுறுத்தினார்.