Latestமலேசியா

பள்ளி மாணவி மற்ற இரு மாணவிகளால் கேலிவதைக்கு ஆளான சம்பவத்தை பேராக் போலீஸ் விசாரிக்கிறது

கெரியான், ஜூன்-25, பேராக், கெரியானில் உள்ள பள்ளியொன்றில் மாணவி ஒருவர் கேலிவதைக்கு ஆளானதைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் ஜூன் 14-காம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

15 வயது மாணவிகள் இருவர் 13 வயது மாணவியை கேலிவதை செய்வது வைரலான வீடியோவில் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியைக் கழிவறைக்குக் கூட்டிச் சென்று, அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து, அதனைக் கைப்பேசியிலும் அவர்கள் பதிவுச் செய்திருக்கின்றனர்.

அதே பள்ளியில் படிக்கும் 15 வயது பையனுடன், பாதிக்கப்பட்ட பெண் நெருங்கிப் பழகி வருவதால் ஏற்பட்ட பொறாமையே அக்கேலிவதைக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

அப்பையன், தாக்கிய மாணவிகளில் ஒருவரது காதலனாம்.

அச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராக் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!