பாசிர் மாஸ், மார்ச் 22 – கிளந்தான், பாசிர் மாஸ், கம்போங் கொடொன்டொங்கில், போலீஸ் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது, தப்பி ஓட முயன்ற மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில மைல் தூரம் துரத்திச் சென்று போலீசார் அவர்களை கைதுச் செய்ததை, பாசிர் மாஸ் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் காமா அஜுரல் முஹமட் உறுதிப்படுத்தினார்.
நேற்றிரவு மணி 7.35 வாக்கில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மூன்று பேருடன் பெரோடுவா கன்சில் ரக கார் ஒன்று நிற்பதை கண்டனர்.
போலீசாரின் வருகையை உணர்ந்த அந்த காரின் ஓட்டுனர், காரை அருகிலுள்ள கிராமத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார்.
அவர்களை வேகமாக போலீசார் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர்.
எனினும், கன்சில் கார் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றை மோதி விபத்துக்குள்ளானதில், அக்காரில் பயணித்த மூன்று ஆடவர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக, போதைப் பொருள் தொடர்பான பழைய குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, 36 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.