![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-10-Jun-2024-09-00-AM-2567.jpg)
மாரான், ஜூன்-10, பஹாங், மாரானில் பாட்டி வீட்டில் தென்னை மரம் சாய்ந்து தலையில் விழுந்ததில், 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
FELDA Jengka 6-ரில் சனிக்கிழமை மாலை 5.30 வாக்கில் நிகழ்ந்த சம்பவத்தின் போது வீட்டின் பின்புறத்தில் தனது தந்தையுடன் காய்ந்த கிளைகளை அவன் பொறுக்கிக் கொண்டிருந்தான்.
திடீரென மும்முறை பெரும் சத்தத்தோடு தென்னை மரம் சாய்ந்து அவன் மீது விழுந்தது.
தன் கண் முன்னே மகன் மயங்கி விழுந்து, அவன் காதிலும் மூக்கிலும் இரத்தம் வழிந்ததாக Wan Muhammad Harith Syauqi Wan Hazizi-யின் தாய் சோகத்துடன் கூறினார்.
உடனடியாக தெமர்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அச்சிறுவன், சிகிச்சை பலனளிக்காது நேற்று காலை உயிரிழந்தான்.
கடைக்குட்டி மகனை இத்தனை சீக்கிரத்தில் இழக்க வேண்டும் என்பது விதி என தேற்றிக் கொள்ள வேண்டியிருப்பதாக Wan Muhammad Harith-தின் தாய் வேதனையுடன் சொன்னார்.