![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-07-Jun-2024-07-48-PM-6932.jpg)
பினாங்கில் , Seberang jaya-விலுள்ள பல பொருட்களை விற்கும் கடை ஒன்றில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை இரவு மணி 11.50 அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக Seberang Perai Tengah போலீஸ் தலைவர் ஹல்மி ஹரிஸ் ( Helmi Aris) தெரிவித்தார். அந்த சம்பவத்தின்போது விற்பனையாளர் ஒருவரை அணுகிய இரண்டு ஆடவர்கள் அவரிடம் மதுபானம் கேட்டுள்ளனர்.
அவர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தம்மிடம் இருந்த தலைக்கவசத்தினால் மற்றவரை தாக்கியுள்ளார். இந்த தகராறினால் ஒருவர் முகத்தில் காயம் அடைந்தார். மது போதைக்கு உள்ளான நபர் ஒருவருக்கும் கடையின் உரிமையாளருக்குமிடையே ஏற்பட்ட தகராறு சமூக வலைத்தளங்களில் வைரலானது.